வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் 2ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!!

1385

2ஆம் தவணை..

அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்றையதினம் (19.04.2021) ஆரம்பமாகின.

நோன்பு ஆரம்பமானதை அடுத்து முஸ்ஸிம் பாடசாலைகள் முடப்பட்டுள்ளதுடன் ஏனைய அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இன்று முதல் இடம்பெறுகின்றன.

மேலும் வவுனியா மாவட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகiளை பின்பற்றிய பாடசாலைக்கு சமூகமளித்திருந்தமையினை அவதானிக்க கூடியதாகவிருந்தது.