வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிறுமி பலி : இருவர் படுகாயம்!!

3991

விபத்து..

வவுனியா ஈரட்டைபெரியகுளம் பகுதியில் இன்று (25.04.2021) காலை 9 மணியளவில் மோட்டார் சைக்கிள் – முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஈரட்டைபெரியகுளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் வவுனியா நகரிலிருந்து ஈரட்டைபெரியகுளம் ஊடாக பயணித்த முச்சக்கரவண்டியும் ஈரட்டைபெரியகுளம் பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில்,

இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 10 வயதுடைய சிறுமியே இவ்வாறு பலியாகியுள்ளமையுடன் சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.