வவுனியா ஒமந்தை மத்திய கல்லூரியில் இரத்ததான முகாம்!!

1386

இரத்ததான முகாம்…

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் பாக்கியம் அறக்கட்டளை மற்றும் சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இடம்பெற்றது.

இவ் இரத்தான முகாமில் ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் , ஆசிரியர்கள் ,பாக்கியம் அறக்கட்டளை அமைப்பினர் மற்றும் சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குருதி கொடையளித்தவர்களுக்கு ‘உயிர்நேய மாண்பாளர்’ எனும் சான்றிதழும் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.