இந்தியாவின் ஹரியான மாநிலத்தில் பெண் ஒருவருக்கு ஒரே உடலில் இரட்டைத் தலையுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஹரியான மாநிலத்தைச் சேர்ந்தவர் ஊர்மிளா சர்மா(29), மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த இப்பெண்ணுக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இக்குழந்தையானது ஒரே உடலில், இரண்டு தலைகள் மற்றும் இரண்டு கழுத்துக்களுடன் பிறந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், இரட்டை தலை உள்ள குழந்தைகள் நீண்ட நாட்கள் வாழ்வார்கள் என எதிர்பார்க்க முடியாது.
ஆனால் குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளது. ஒரு உடல் மற்றும் அனைத்து முக்கிய உடல் உறுப்புகளுடன் 2 தலைகள் இணைந்து உள்ளது. அதனால் அதை பிரிப்பது என்பது முடியாத காரியம் என்று கூறியுள்ளனர்.