வவுனியாவில் மான் இறைச்சி தருவதாக கூறி மக்களிடம் பணத்தை சுருட்டியவருக்கு எதிராக முறைப்பாடு!!

2043

மான் இறைச்சி..

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மான் இறைச்சி தருவதாக கூறி பலரிடம் பணத்தை பெற்று விட்டு இறைச்சி கொடுக்காது ஏமாற்றியவருக்கு எதிராக பொலிசில் இன்று (27.04) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இரு நாட்களுக்கு முன்னர் நபர் ஒருவர் மான் இறைச்சி தருவதாக கூறி அப் பகுதி மக்கள் பலரிடம் பணம் பெற்றுள்ளதுடன், இறைச்சியை எடுத்து வருவதாக கூறி சென்றுள்ளார்.

ஆனாலும், பணம் பெற்றுக் கொண்ட மக்களுக்கு இறைச்சியை வழங்கவில்லை. அவர்களின் பணத்தை பெற்ற பின் இறைச்சியை கொடுக்காது ஏமாற்றியுள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட இருவர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த முறைப்பாட்டை பெற்றுக் கொண்ட வவுனியா பொலிசார் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் மரை இறைச்சி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்ற நபர் ஒருவர் இறைச்சியை வழங்காது ஏமாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.