வவுனியாவில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

1913

முகக்கவசம்..

வவுனியாவில் வீதிகளில் முகக்கவசங்கள் அணியாமல் உரிய முறையில் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை பின்பற்ற தவறியவர்களுக்கு எதிராக வவுனியா பொலிசார் கடுமையான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

வீதிகளில் நடந்து செல்பவர்கள், மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள் என்பனவற்றில் பயணிப்பவர்கள் உரிய முறையில் முககவசம் அணிந்து செல்லாதவர்களுக்கு எதிராக இன்றையதினத்திலிருந்து பொலிசார் விஷேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை பெருக்கெடுக்க தொடங்கியுள்ளதை அடுத்து சுகாதாரத்துறையினர் பொலிசார் பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து சுகாதார முறைகளை உரிய முறையில் பின்பற்ற தவறியவர்களுக்கு எதிராக பொலிசாரால் பெயர் விபரங்களை எழுதிய பின்னர் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்படுகின்றனர்.