கொரோனாவால் இறந்த தாயின் உடலை பைக்கில் எடுத்து சென்ற மகன் : அதிர்வலையை ஏற்படுத்திய புகைப்படம்!!

1712

கொரோனாவால்..

இந்தியாவில் கொரோனாவால் இ.றந்த தாயின் உடலை மகன் பைக்கில் கொண்டு சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. ஆந்திராவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அம்மாநிலத்தில் கொரோனா தீவிரப் பரவல் காரணமாக மருத்துவமனைகளில் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவருக்கு கொரோனா நோய் அறிகுறிகள் இருந்துள்ளன.

இதனையடுத்து அவருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது, ஆனால் அதன் முடிவுகள் வருவதற்குள்ளாகவே அந்தப் பெண் திடீரென உ.யிரிழந்தார்.

ஸ்ரீகாக்குளம் மாவட்டம், மண்டசா மண்டல் கிராமத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி திங்களன்று கொரோனா போன்ற அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரது நோய் தீவிரமடைய மருத்துவமனையிலேயே இ.றந்துபோனார். ஆம்புலன்ஸோ அல்லது வேறு வாகனங்களோ இருந்தால் உடலை ஏற்றிச் சென்று விடலாம் என்று இ.றந்த பெண்மணியின் குடும்பத்தினர் காத்திருந்தனர்.

ஒரு ஆம்புலன்ஸும், வாகனமும் கிடைக்காததால் பெண்ணின் மகனும் மருமகனும் பைக்கில் உட்காரவைத்தே இடுகாட்டுக்கு உ.டலைக் கொண்டு சென்றனர். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.