இந்தியாவில் ஒரே நாளில் 3285 பேர் கொரோனா தொற்றால் பலி!!

649

கொரோனா..

இந்தியாவில் நாளுக்கு நாள் கோவிட் வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கோவிட் வைரஸின் இரண்டாவது அலைகளால் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தியா விளங்குகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 3,293 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியா முழுவதும் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 201,187 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்சிசன் பற்றாக்குறை, நோயாளிகளுக்கு வைத்தியசாலைகளில் படுக்கைகள் மற்றும் பிற மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறை காரணமாக நாளாந்த கோவிட் உயிரிழப்புகள் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை அதிகளவு இடம்பெற்றுள்ளது.

கடந்த ஏழு நாட்களாக இந்தியாவில் நாளாந்தம் 3 இலட்சத்திற்கும் அதிகமான கோவிட் தொற்றாளர்களை பதிவு செய்துள்ளது.