ஒவ்வொரு மணி நேரத்திற்கு 115 பேர்.. ஓய்வில்லாமல் எரியும் சடலங்கள் : இந்தியாவின் பரிதாப காட்சிகள்!!

1735

இந்தியாவில்..

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 115 பேர் இறந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் தலைநகரான டெல்லி கொரோனாவால் கதிகலங்கி போய் நிற்கிறது. இங்கிருக்கும் மக்கள் போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையின் நாட்டின் கிழக்கில் உள்ள இடத்தில், நாள் ஒன்றிற்கு சுமார் 100 உடல்களை தகனம் செய்வதை ஒருங்கிணைத்து வரும், ஜிதேந்தர் சிங் சாந்தி என்பவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர், இறந்து கிடக்கின்றனர்.

இப்படி எங்களுக்கு தொடர்ந்து சடலங்கள் வந்து கொண்டே இருக்கிறது. சடல்ங்களின் எண்ணிக்கை அதிகமானால் வேறு வழியில்லாமல் சாலையில் தான் தகனம் செய்வோம்.

இங்கு அதிக இடம் இல்லை என்று சுட்டிக் காட்டினார். மேலும், டெல்லியில் இருக்கும் பகுதி ஒன்றில் ஏராளமான சடலங்கள் எரிக்கப்படுவதை பார்க்க முடிகிறது.

அங்கு ஓய்வில்லாமல் சடலங்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த செவ்வாய் கிழமை மட்டும், 320,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது எந்த ஒரு நாட்டிலும் இதுவரை பதிவாகாத அதிக பாதிப்பை கொண்ட ஒரே நாள் பதிவு ஆகும். சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,771 இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது.

சுமார் 115 இந்தியர்கள் ஒவ்வொரு மணி நேரமும் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படி கொரோனாவுடன் போராடி வரும் இந்தியாவிற்கு வெளிநாட்டில் இருந்து குறிப்பாக பிரித்தானியா 100 வென்டிலேட்டர்கள் 95 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் போன்றவை அனுப்ப துவங்கியுள்ளது.

இந்தியா, ஆக்ஸிஜன் பற்றாக் குறை மற்றும் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக் குறை போன்றவைகளை எதிர்கொள்வதால், இரயில்களில் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஆக்ஸிஜன் டேங்கர்களை தேவைப்படும் மாநிலங்களுக்கு விமானம் மூலம் அனுப்பும் சேவையும் இந்திய அரசால் துவங்கப்பட்டுள்ளது, நினைவுகூரத்தக்கது.