வவுனியாவில் சுகாதாரத்துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது கொரோனா தடுப்பூசி ஏற்றல்!!

1157

கொரோனா தடுப்பூசி…

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (29.04) சுகாதாரத்துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது கொரோனா தடுப்பூசி ஏற்றி வைக்கப்பட்டது.

இந்திய மற்றும் சீன அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பல்வேறு மாவட்டங்களிலும் தேவையின் பொருட்டு பயன்படுத்துவதற்கான நடவடிக்கையினை சுகாதாரத்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்திற்கு இரண்டாவது கட்டமாக 1500 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர், வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதாரத் துறையினர், நோயாளர் காவு வண்டி சாரதிகள் உள்ளிட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிகள் ஏற்றப்பட்டப்பட்டன.