எங்க அம்மா செத்துருவாங்க… ஆக்ஸிஜனை எடுத்துட்டு போயிடாதீங்க அய்யா : பொலிசார் முன் மண்டியிட்டு கதறிய மகன்!!

970

உத்தர பிரதேச மாநிலத்தில்..

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் ஆக்ஸிஜனை சிலிண்டரை எடுத்துச் செல்லவேண்டாம் என சிகிச்சை பெற்று வரும் தாய்க்காக மகன் பொலிசார் முன் மண்டியிட்டு கெஞ்சிய காட்சி இணையத்தில் வெளியாகி கலங்க வைத்துள்ளது.

ஆக்ராவில் உள்ள மருத்துவமனையிலே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த வீடியோவில், பிபிஇ கிட் அணிந்திருக்கும் நபர், பொலிசார் முன் மண்டியிட்டு, தயவு செய்து ஐயா.

எங்கிருந்து நான் சிலிண்டரை ஏற்பாடு செய்வேன்? என் அம்மாவை உயிருடன் திரும்பி வீட்டிற்கு அழைத்து வருவேன் என என் குடும்பத்தினரிடம் வாக்குறுதி அளித்து விட்டு இங்கே வந்துள்ளேன் என கதறுகிறார்.

எனினும், கதறிய நபரை கண்டுக்கொள்ளாத பொலிசார் தங்கள் கடமையை செய்துள்ளனர். இரண்டு நபர்கள் சிலிண்டரை எடுத்துச்செல்வதை வீடியோ காட்டுகிறது. காவல்துறையின் இச்செயலுக்கும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் குவிந்தன.

இந்நிலையில், ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட எந்த சிலிண்டரையும் பொலிசார் எடுத்துச்செல்லவில்லை எனக் கூறி ஆக்ரா காவல்துறை குற்றம்சாட்டை மறுத்துள்ளது.

குறித்த வீடியோவில் மண்டியிட்டு கதறிய நபர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினருக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்து தரும் படி பொலிசாரிடம் கோரியதாக ஆக்ரா எஸ்.பி விளக்கமளித்துள்ளார்.