வவுனியாவில் தனியார் வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று!!

2899

கொரோனா..

வவுனியாவில் தனியார் வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த சிலநாட்களாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் எழுமாறான வகையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள சில வியாபார நிலையங்களில் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பலரிடம் பெறப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றது.

அந்தவகையில் வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள தனியார் மருந்துவனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.