வவுனியாவில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

3839

கொரோனா..

வவுனியாவில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் பிசீஆர் முடிவுகள் சில இன்று (01.05) இரவு வெளியாகின.

குறித்த முடிவுகளின் படி 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதில், வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏனைய 6 பேர் சமூகத்தில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அந்தவகையில், தோணிக்கல், கூமாங்குளம், குருமன்காடு, குருக்கள் புதுக்குளம், உளுக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 பேருக்கும், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கொரோனா தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்தும் நடவடிக்கையிலும் சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.