ஜெயக்குமாரி, விபுசிகாவை விடுதலை செய்யக்கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

345

ஜெயக்குமாரியின் விடுதலையை வலியுறுத்தியும், சட்டவிரோத கைதுகளை கண்டித்தும், காணாமல் போனோர் தொடர்பில் சிறீலங்கா அரசை பதிலளிக்குமாறு கோரியும், வவுனியா நகரப்பகுதியில் இன்று காலை 11.30 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் மணிவண்ணன், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச்செயலர் பாஸ்கரா, மனித உரிமை செயல்பாட்டாளர் பிரிட்டோ, பெண்கள் மனித உரிமை அமைப்பினர், கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்கள், வைத்தியகலாநிதி சி.சிவமோகன், ரவிகரன், தியாகராசா, மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் செபமாலை அடிகளார்,

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கி.தேவராசா, வவுனியா மாவட்ட காணாமல் போன உறவுகளை தேடும் சங்கத்தலைவி பாலேஸ்வரி, மீளக்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பின் தலைவர் மகேந்திரம், காணாமல் போன தம் உறவுகளை தேடும் குடும்பங்கள், தம் பிள்ளைகளின் விடுதலைக்காக ஏங்கும் குடும்பங்கள், அரசின் ஜனநாயக மறுப்பு சம்பவங்களால், ஏதேச்சதிகாரங்களால் பாதிக்கப்பட்டவர்கள், சமுக ஆர்வலர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

1 2 3 4 5 6 7 8