இலங்கையில் வீடுகளில் நிகழ்வுகளை நடத்த, அயலவர்கள் வீடுகளுக்கும் செல்லத் தடை!!

1561

கோவிட் வைரஸ் தீவிரம்..

கோவிட் வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் வீடுகளில் கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

புதிய சுகாதார வழிகாட்டிக்கு அமைய தடை விதிக்கப்பட்டுள்ள கூட்டங்கள், விருந்துபசார நிகழ்வுகள் மற்றும் திருமண வைபவங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை வீடுகளிலோ அல்லது வேறு இடங்களிலோ நடத்த முடியாது.

கோவிட் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை வேறு வீடுகளுக்கு செல்வதையும் உறவினர்களை சந்திப்பதையும் தற்காலிகமாக தவிர்க்குமாறு இராணுவத் தளபதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.