மூவின ஒற்றுமையை குலைக்காதீர்கள் : வவுனியாவில் நடைபெற்ற ஊர்வலம்!!(படங்கள்)

352

இலங்கையில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையான வாழ்க்கையை மனித உரிமை பேரவை பிரிப்பதாக தெரிவித்து வவுனியாவில் நேற்று(15) காலை ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தினவினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இவ் ஊர்வலத்தில் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தநிலையில் ஊர்வலத்தில் கலந்த கொண்டிருந்த தமிழ் பெண் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்..

எமக்கு வீட்டுத்திட்டமில்லை, குடிநீர் இல்லை என பல பிரச்சினைகள் உள்ளது. இந் நிலையில் இன்று காலை இராணுவத்தினர் எம்மை இது தொடர்பாக கலந்துரையாட வருமாறு அழைத்து வந்திருந்தனர். தற்போது வீடு செல்கின்றோம் என தெரிவித்தார்.

தேக்கவத்தையில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் வவனியா மாவட்ட அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பமான இவ் ஊர்வலம் வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு வவுனியா பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.

1 2 354