வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவன் அ.அபிதன் கணிதப் பிரிவில் 3A சித்திகளுடன் முதலிடம் பெற்று சாதனை!!

4584

அசோக்குமார் அபிதன்..

இன்று (04.05.2021) பிற்பகல் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி கணி தப் பிரிவில் வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவன் அசோக்குமார் அபிதன் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 326வது இடத்தையும் பிடித்து வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கோபிதன் காமன்ஸ் நிறுவன உரிமையாளர் அசோக்குமார் கோகிலதேவியின் மகனான இவர் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 326வது இடத்தையும் பிடித்துள்ளார்.

இதேவேளை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் வாகீசன் 3A சித்திகளை பெற்று கணிதப் பிரிவில் மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவர்களை வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.