வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவி ப.சுபிலக்ஷி கலைப் பிரிவில் 3A சித்திகளுடன் முதலிடம்!!

22824

பரமசிவம் சுபிலக்ஷி..

இன்று (04.05.2021) பிற்பகல் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி கலைப் பிரிவில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய மாணவி பரமசிவம் சுபிலக்ஷி 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 351வது இடத்தையும் பிடித்து வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தில் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது. https://doenets.lk/examresults என்ற இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

2020 ஆண்டுக்கான க.பொ. த உயர்தர பரீட்சை நாடு முழுவதும் உள்ள 2,648 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. இதில் 362,824 பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றியிருந்தனர்.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவர்களை வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.