வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் அபிதன், வாகீசன், சயங்கொண்டான், கோகுலவதனன் 3A சித்திகளைப் பெற்று சாதனை!!

3360

தமிழ் மகா வித்தியாலயத்தில்..

இன்று (04.05.2021) பிற்பகல் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி கணிதப் பிரிவில் வவுனியா தமிழ் மகா மகாவித்தியாலய மாணவர்கள் மூவர் 3A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதன் அடிப்படையில் அசோக்குமார் அபிதன் 3A சித்திகளுடன் மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், E.வாகீசன் 3A சித்திகளுடன் மாவட்ட ரீதியில் இரண்டாமிடத்தையும், S.சயங்கொண்டான் 3A சித்திகளுடன் மாவட்ட ரீதியில் நான்காமிடத்தையும், A.அபினாஷ் 2A B சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 6ம் இடத்தையும், A.ஜெரோசன் 2A B சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 8ம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் விஞ்ஞானப் பிரிவில் P.கோகுலவதனன் 3A சித்திகளுடன் மாவட்ட ரீதியில் இரண்டாமிடத்தையும், K.லக்சனா 2A B சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 5ம் இடத்தையும், V.வைஷ்ணவி A 2B சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 8ம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

வர்த்தகப் பிரிவில் M.சஞ்சித் 2A B சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 7ம் இடத்தையும், P.தினோஜன் 2A B சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 9ம் இடத்தையும்,

உயிரியல் தொழில்நுட்பப் பிரிவில் S.கிருஷாணி B C S சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 4ம் இடத்தையும், A.B.அன்ரனி C 2S சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 5ம் இடத்தையும், S.சுலக்க்ஷன் 2C S சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 9ம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவர்களை வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.