வவுனியாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று : இன்று மட்டும் 11 பேருக்கு தொற்று உறுதி!!

2850

கொரோனா..

வவுனியாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இன்று மட்டும் வவுனியாவில் 11 பேர் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் சில இன்று (05.05) இரவு வெளியாகின.

அதில், கோதண்டர் நொச்சிக் குளத்தைச் சேர்ந்த வவுனியா வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி சாரதி, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர்,

கெப்பற்றிக்கொல்லாவ பகுதியைச் சேர்ந்த பொலிசார் ஒருவர், குருக்கள் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த இருவர் என 6 பேருக்கு மேலும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளான 6 பேரையும் கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள சுகாதார பிரிவினர், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், வவுனியாவில் இன்று வவுனியாவில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.