காணிக் கிளை..
வவுனியா பிரதேச செயலகத்தின் காணிக் கிளையின் சேவைகள் அனைத்தும் இன்றிலிருந்து எதிர்வரும் 19 ஆம் திகதிவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் கொவிட்-19 தொற்று பரவலடைந்துவரும் அதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகங்களால் விதிக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் கொவிட்-19 தொற்று பரவல்நிலை காரணமாக வவுனியா பிரதேச செயலகத்தின் காணிக்கிளையின் அனைத்து சேவைகளும் இன்றிலிருந்து எதிர்வரும் 19 ஆம் திகதிவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தெரிவித்துள்ளார்.