ஆலய நிர்வாகத்தினர்..
வவுனியாவில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாத ஆலயத்தினர் மூவர் சுகாதார பரிசோதகர்களால் சுய தனிமைப்படுத்தபட்டனர்.
வவுனியா இரண்டாம் குறுக்குத்தெரு ஞானவைரவர் ஆலயத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது சுமார் 50 மேற்பட்டவர்களுடன் செவ்வாய்கிழமை (04.05.2021) மாலை அட்டமி பூஜை நடைபெற்றது.
இதன்போது குறித்த ஆலயத்திற்கு விஜயம் செய்த சுகாதார பரிசோதர்கள் ஆலயத்தை பார்வையிட்டதுடன் ஆலய நிர்வாகத்தினர் மூவருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக ஆலய குரு, உபயகாரர், ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் என மூவர் சுகாதார பரிசோதகர்களால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.