இலங்கையில் பாவனைக்கு உதவாத பணம் மத்திய வங்கிக்கு மீள அனுப்பி வைக்கப்பட உள்ளது. அசுத்தமான மற்றம் கிழிந்த பணம் இவ்வாறு மீள ஒப்படைக்கப்பட உள்ளது.
எதிர்காலத்தில் சுத்தமான நோட்டுக்களை மட்டுமெ புழக்கத்தில் விட உள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. பண நோட்டுக்களை பயன்படுத்துவது குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
எல்லா பகுதிகளிலும் இது தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளது. அசுத்தமான நோட்டுக்களை வங்கியில் கொடுத்து அதற்கு பதிலாக சுத்தமான நோட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும்.





