ஆச்சிபுரம் பகுதியில்..
வவுனியா சிதம்பரம் ஆச்சிபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரை து.ன்.பு.று.த்.தி நி.ர்.வா.ணமாக்கி அதனை தொலைபேசியில் பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சமனங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரை நி.ர்.வாணமாக்கியதுடன் து.ன்.பு.று.த்.தி அதனை தொலைபேசியில் காணொளியை பதிவுசெய்து மேற்கொண்டு சமூகவலைத்தளத்தில் குறித்த நபர் பதிவேற்றியிருந்தார்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதனையடுத்து அவரை அ.வமானபடுத்தி சி.த்.தி.ர.வ.தை.க்குட்படுத்துவது த.ண்டனைக்குரிய கு.ற்றம் என்ற அடிப்படையில் குறித்த கு.ற்றச்செயல்களில் ஈடுபட்டமை,
காணொளியினை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியமை என பல்வேறு கு.ற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆச்சிபுரம் பகுதியினை சேர்ந்த 30 வயதுடைய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த காணொளியினை பதிவேற்றிய சமூக வலைத்தளங்களின் விபரங்களை பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளதுடன் குறித்த இளைஞரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குறிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.