திடீரென்று கழன்று விழுந்த சக்கரம் : விமானி எடுத்து துணிச்சல் முடிவு!!

2431


இந்தியாவில்..



இந்தியாவில் நோயாளியுடன் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் புறப்படும் போது, திடீரென்று அதில் இருந்த சக்கரம் கழுன்று விழுந்ததால், விமானி சமயோஜிதமாக செயல்பட்டு, யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தரையிரக்கிய சம்பவம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.



மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து ஹைதராபாத்திற்கு ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று நேற்றிரவு புறப்பட்டது. இதில், இரண்டு விமானப் பணியாளர்கள், நோயாளி, அவரது உறவினர், மருத்துவர் என மொத்தம் ஐந்து பேர் குறித்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.




இதையடுத்து விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது, திடீரென்று அந்த விமானத்தின் சக்கரம் ஓடுபாதையிலேயே கழன்று விழுந்தது. இதை உடனடியாக அறிந்த விமானி, விமானத்தை மும்பை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க விமானி முடிவு செய்தார்.


சக்கரங்கள் இல்லாத காரணத்தினால் பெல்லி-லேண்டிங் முறையில் விமானத்தைத் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது சக்கரங்கள் இன்றி விமானத்தில் உடல் பகுதியைக் கொண்டு தரையிறக்குவதே பெல்லி-லேண்டிங் என்று கூறப்படும்.

அப்படி விமானம் தரையிரங்கும் போது, விமானத்தில் தீ பிடிக்க வாய்ப்பு இருப்பதால், மும்பை விமான நிலை ஊழியர்கள் எச்சரிக்கையுடன், விமான ஓடுதளத்தில் நுரைகள் தெளிக்கப்பட்டிருந்தன.


விமானி திறமையாகத் தரையிறக்க, விமானத்தில் இருந்த ஐந்து பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். விமான நிலை ஊழியர்கள் விமானம் தரையிரங்கியவுடன், விமானம் மீது தண்ணீர் அடித்து, தீ விபத்து எதுவும் ஏற்படாமல் பார்த்து கொண்டனர்.