95 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு : திக் திக் நிமிடங்கள்!!

1657

ராஜஸ்தானில்..

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் 16 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.

ராஜஸ்தானில் ஜலூர் மாவட்டத்தில் உள்ள லச்சாரி கிராமத்தில் வயல்வெளியில், அனில் என்ற 4 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, அருகில் இருந்த புதிதாகக் கட்டப்பட்டு, மூடாமல் இருந்த 95 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில் அனில் தவறி விழுந்தான். அவன் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் உள்ளே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டது. சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு, தொடர்ந்து 16 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த மீட்புப் பணியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள் மற்றும் சில உள்ளூர்வாசிகளின் கூட்டு முயற்சியால் அவர் மீட்கப்பட்டுள்ளார். குழந்தை அனில் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆழ்துளையில் சிக்கியிருந்த காலகட்டத்தில், குழந்தைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவியுடன் ஒரு குழாய் வழியாக ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது, மேலும் நிலைமையைக் கண்காணிக்க கயிறின் உதவியுடன் ஒரு சி.சி.டி.வி கேமராவும் அமைக்கப்பட்டிருந்தது.