வவுனியா நகரில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!!

1173

தொற்று நீக்கும் செயற்பாடு..

கொவிட் 19 இன் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா நரப் பகுதியில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று (08.05) முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா மூன்றாவது அலையின் தாக்கமானது வவுனியாவில் வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனைப் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரப் பிரிவினருடன் இணைந்து பல்வேறு தரப்பினரும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தால் அதிகமாக மக்கள் வந்து செல்லும் இடங்களான வவுனியா பழைய பேருந்து நிலையம், மீன் சந்தை கட்டிடடத் தொகுதி, சந்தை கட்டிடத் தொகுதி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் கிருமி தொற்று நீக்கும் மருந்து விசிறப்பட்டு தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.