வவுனியா கருமாரியம்மன் ஆலயத்தில் கொரோனாவிலிருந்து நாடு மீள வேண்டி விசேட ஹோம வழிபாடு!!

2405

விசேட ஹோம வழிபாடு..

இலங்கையில் அதிகரித்து கொரோனா தொற்றிலிருந்து நாடு மீண்டெழுந்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ நாடு முழுவதும் சகல ஆலயங்களிலும் மாலை 5.46மணிக்கு விசேட மஹா மிருத்யுஞ்சய ஹோம பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

கொரோனா இலங்கையை விட்டு நீங்க வேண்டும், முழு உலகத்தை விட்டும் நீங்க வேண்டும், கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் சுகமடைய வேண்டும். எல்லோரும் வளமான வாழ்க்கையை பெற வேண்டும்.

இந்த பிரார்த்தனை மூலம் நாங்கள் இந்த கோரோனாவிலிருந்து விடுபட வேண்டும் எல்லோரும் சுபீட்சமாக வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையாக இது அமைய வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை நாட்டிலுள்ள சகல மதத் தலங்களிலும் வழிபாட்டு பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் பல ஆலயங்களில் மஹா மிருத்யுஞ்சய ஹோம பூஜை வழிபாடுகள் இன்று (08.05.2021) மாலை 5.46 மணிக்கு இடம்பெற்றன. அந்த வகையில் குட்செட்வீதி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானத்திலும் இவ் மஹா மிருத்யுஞ்சய ஹோம பூஜை சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இவ் விசேட வழிபாட்டில் கொரோனா தொற்று காரணமாக கலாச்சார உத்தியோகத்தர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என 10க்கு உட்பட்டவர்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர்.