வவுனியாவில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

2959

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் சில இன்று (08.05) இரவு வெளியாகின.

அதில், செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த குருக்கள் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 5 பேருக்கும், பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தைச் சேர்ந்த 2 பேருக்கும் என என 7 பேர் மேலும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளான 7 பேரையும் கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள சுகாதார பிரிவினர், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.