27 சத்திர சிகிச்சைகள், இரு கைகளில் ஒரு விரல் : உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவி!!

2388

கண்டி..

மனிதர்களாக படைக்கப்பட்ட நாம் உளவியல் குறைபாடு,உடற் குறைபாடு போன்ற பல குறைப்பாடுகளுடன் தனது அன்றாட வாழ்க்கையை கழித்து வருகின்றோம்.

இவை ஒருவருடைய வாழ்க்கைக் காலத்தில் ஏற்படலாம் அல்லது பிறப்பிலேயே இருக்கலாம்.ஆனால் பலர் இவ்வாறான தடைகளையும் தாண்டி வாழ்க்கையில் சாதித்து வருகின்றனர்.

அந்த வகையில் கண்டியினை சேர்ந்த மாணவியொருவர் 27 சத்திர சிகிச்சைகள், இரு கைகளில் ஒரு விரலுடன் மாத்திரமே தனது வாழ் நாளை கழித்து வந்துள்ளார். குறித்த மாணவி வெளியாகிய உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் A2,B சித்திகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.