பயணக் கட்டுப்பாடுகள்..

நாடளாவிய ரீதியில், இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இரவு வேளையில் பயணத் தடை அமுலுப்படுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், இன்றிலிருந்து இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், இக்காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





