விமானத்தில் கோளாறுகளோ, பிரச்சினையோ இல்லை : விமானி!!

363

Flight

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் இந்த விமான கடத்தலில் பைலட்டுக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கப்படுவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய தகவலின் படி விமானம் காணாமல் போன அன்று கடைசி நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் பேசிய விமானி விமானத்தில் கோளாறுகளோ, பிரச்சினையோ இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் இந்த விமானம் பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் இஸ்லாமாபாத் ரேடார் நெட்வேக் விமானம் பற்றி எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளது. எனினும் விமானத்தை தேடும் பணியில் தானும் உதவுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.