வவுனியாவில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

2424

கொரோனா..

வவுனியாவில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (13.05.2021) இரவு வெளியாகின.

அதில், வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த தாதியர்கள் இருவருக்கும், மகா கச்சகொடி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும், ஈரப்பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த இருவருக்கும், நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதராப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.