வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணம்!!

3690

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த வயதான பெண் ஒருவர் கொரோனா நோயால் இன்று (14.05.2021) மரணமடைந்துள்ளார்.

குறித்த பெண் நேற்று சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் மரணமடைந்துள்ளார்.