11 வயதான மகளின் சடலத்தை தோளில் தூக்கிக் கொண்டு மயானத்திற்கு ஓடிய தந்தை!!

1197

இந்தியாவில்..

இந்தியாவில் உ.யிரிழந்த 11 வயது மகளின் ச.டலத்தை தந்தை தோளில் சுமந்து சென்ற வீடியோ வெளியாகி காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜலந்தரில் 11 வயது சிறுமி உடல் நலக்குறைவு காரணமாக ஜலந்தரில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிறகு மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் அவரை அம்ரிஸ்டரில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

பின்னர் சிறுமிக்கு அங்குள்ள அறுவைசிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உ.யிரிழந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் சி.றுமியின் உ.டல் கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் சி.றுமியின் உ.டல் முழுவதும் பி.ரேத ப.ரிசோதனை செய்யப்பட்டு மூடி இருந்த நிலையில் உறவினர்கள், மக்கள் சி.றுமிக்கு தொற்றுநோய் பாதிக்கப்பட்டு இ.றந்ததாக எண்ணி ப.யத்தில் யாரும் இறுதி சடங்கிற்கு கூட வரவில்லை.

இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மனம் நொந்துபோன தந்தை இறுதியில் தன்னுடைய 11 வயது மகளை தன்னுடைய தோளில் சுமந்தபடியே இடுகாட்டிற்கு வரை தூக்கிச் சென்று தன்னுடைய மக்களுக்கான இறுதிச்சடங்கு செய்துள்ளார்.

இதனையடுத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது தொடர்ந்து காவல்துறையினர் வி.சாரணை மேற்கொண்டனர். வி.சாரணையில் பதினொரு வயது சிறுமி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கவில்லை என காவல் துணை ஆணையர் கன்ஷ்யம் தோரி தெரிவித்துள்ளார்.