வவுனியா வேப்பங்குளம் பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் இன்று(17.03) மதியம் 12 மணியளவில் நடந்த விபத்தில் மூவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
நாய் ஒன்று குறுக்கே பாய்ந்ததனால் மோட்டார் சைக்கிளும் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், சைக்கிளை செலுத்தியவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ள அதேவேளை சைக்கிளில் பயணித்த பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்கு காரணமான நாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளது.
-பாஸ்கரன் கதீசன்-