வவுனியாவில் ஆத்மசாந்தி பூஜை நிகழ்வில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுடன் பொலிசார் முரண்பாடு!!

1390

ஊடகவியலாளர்களுடன் பொலிசார் முரண்பாடு..

வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்ப்பாட்டில் முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணித்த தமிழ் மக்களிற்கான ஆத்மசாந்திப் பிரார்த்தனை நிகழ்வு குட்செட் வீதி கருமாரி அம்மன் கோவிலில் இன்று இடம்பெற்றது.

அதனை செய்தியாக்கச் சென்ற வவுனியா பிராந்திய ஊடகவியலாளர்களுடன் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் முரண்பட்டிருந்தனர்.

இதன்போது அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையை பொலிசாருக்கு காண்பித்த நிலையில் அதனை தவிர்த்துவிட்டு தேசிய அடையாள அட்டையை காண்பிக்குமாறு தெரிவித்தனர்.

பின்னர் தேசிய அடையாள அட்டையின் பிரகாரமே வெளியில் வரமுடியும்என்றும் அனைவருக்கும் ஒரு நடுமுறையே என்றும் தெரிவித்தனர்.

எனினும் இலங்கை பொலிஸ் திணைக்களம், மற்றும் தகவல்திணைக்களம் ஆகியன ஊடகவியாலளர்கள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நேரங்களிலும் செயதியினை சேகரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக பொலிசாருக்கு தெரியப்படுத்தியபோதும் அவர்கள் அதனை ஏற்க மறுத்தனர்.

பின்னர் சிறிது நேரத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.