வவுனியாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

2638

கொரோனா..

வவுனியாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (17.05) இரவு வெளியாகின.

அதில், வேப்பங்குளம் பகுதியில் ஒருவருக்கும், காக்கையன்குளம் பகுதியில் ஒருவருக்கும், சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், நித்தியநகர் பகுதியில் ஒருவருக்கும், செட்டிகுளம் பகுதியில் இருவருக்கும் என மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியாவில் உள்ள அரச வங்கி ஒன்றின் பிராந்திய முகாமையாளருக்கும் பருத்துறையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.