வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் உலர் உணவுப் பொதிகள்!!

1757

உலர் உணவுப் பொதிகள்…

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 15 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியாக உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

அரசாங்கத்தால் தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் பெறுமதியான இரண்டு பொதிகள் குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் வவுனியா பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட பொதிகளை பிரதேச செயலகத்தின் சிறுவர் பெண்கள் பிரிவைச் சேர்ந்த பெண் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வைத்தனர்.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெளிக்குளம், தச்சங்குளம், மரக்காரம்பளை, நெளுக்குளம், கந்தபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 15 குடும்பங்களுக்கே அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய குறித்த பொதிகள் வழங்கப்பட்டிருந்தன.