தீவிர கண்காணிப்பில் பொலிசார்..

இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போ.ரின்போது முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட இ.ன.ப்.ப.டு.கொ.லை.யி.ன் 12ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (18.05.2021) நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

இறுதிக்கட்ட போ.ரின்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொ.ல்.ல.ப்.ப.ட்.டி.ரு.ந்.த நிலையில் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவு தினமானது அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பா.துகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வவுனியாவில் சுழற்சி முறையில் போ.ராட்டத்தில் ஈடுபட்டு வரும் கா.ணாமல் ஆ.க்கப்பட்டோரின் உறவுகளின் போ.ராட்ட இடம் , நகரசபை பொங்கு தமிழ் நினைவுத் தூபி , குருமன்காட்டு சந்தி,

ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை அண்டிய பகுதிகள் என பரவலாக பொலிசாரின் பிரசன்னம் அதிகரித்துள்ளதுடன் அப் பகுதிகளுக்கு வந்து செல்வோர் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.







