கொரோனா..

வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து அங்கு பணியாற்றும் 31 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதனையடுத்து குறித்த நபருடன் தொடர்புடைய 31 ஊழியர்களை சுகாதார பிரிவினர் அவர்களின் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியதுடன் அவர்களிடமும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.





