அக்கா கெஞ்சியதால் அவருடன் சேர்த்து 16 வயது தங்கையையும் திருமணம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

4204

இந்தியாவில்..

இந்தியாவில் அக்கா மற்றும் தங்கையை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுவே கிராமத்தை சேர்ந்தவர் லலிதா (16).

இவர் வாய் பேச முடியாத மற்றும் காது கேட்க முடியாத மாற்றுதிறனாளி ஆவார். இந்த நிலையில் லலிதாவின் அக்கா சுப்ரியாவுக்கும் (21) உமாபதி என்பவருக்கும் கடந்த 7ஆம் திகதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் சுப்ரியா உமாபதியிடம் சென்று என் சகோதரி லலிதாவையும் நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கெஞ்சினார்.

ஏனெனில் லலிதா மாற்றுத்திறனாளி என்பதால் அவரை யாருமே மணக்க மாட்டார்கள் என சுப்ரியா பயந்தார். இதையடுத்து 7ஆம் திகதி உமாபதி, இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொண்டார்.

இந்த சம்பவம் வெளியில் தெரியவந்த நிலையில் நேற்று முன் தினம் உமாபதி, அவர் பெற்றோர் மற்றும் மாமியார், மாமனாரை பொலிசாரை கைது செய்தனர்.

அதாவது 18 வயதுக்கு குறைவான பெண்ணை மணந்தது மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து குழந்தை நல அதிகாரி ரமேஷ் கூறுகையில்,

மைனர் பெண்ணான லலிதா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். இதன் பின்னர் அவர் விருப்பப்பட்டால் பெற்றோருடன் செல்லலாம், அப்படி இல்லையென்றால் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுவார் என கூறியுள்ளார்.