வவுனியாவை உலுக்கும் கொரோனா மூன்றாவது அலை : 654 பேருக்கு தொற்று, 3 பேர் மரணம்!!

4218

கொரோனா மூன்றாவது அலை..

கொரோனா தாக்கத்தின் மூன்றாவது அலையில் வவுனியா மாவட்டத்தில் 654 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 3 பேர் மரணித்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் தற்போதைய கொரோனா தாக்கத்தின் நிலமைகள் தொடர்பாக மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இன்று (21.05) இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தாக்கத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், அதனை கட்டுப்படுத்த முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் நடைமுறையில் வரும் பயணத்தடையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

தற்போது நோய் பரவும் வேகம் கூடுதலாக உள்ளது. மூன்றாவது அலையின் காரணமாக வவுனியாவில் 654 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 3 பேர் மரணித்துள்ளனர்.

எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பும் அவசியம் எனத் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன், பிரதி சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மு.மகேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம்,

வன்னிப் படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கேமந்த பண்டார, சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் திஸால் லாடி சில்வா, சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.