வவுனியாவில் கொரோனாவால் மரணமடைந்தவரின் உடல் பூந்தோட்ட மின்சார மயானத்தில் தகனம்!!

1833

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த 40 வயது நபரின் உடல் வவுனியா, பூந்தோட்டத்தில் உள்ள மின்சார மயானத்தில் இன்று காலை (23.05) தகனம் செய்யப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த வவுனியா, கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (22.05) இரவு மரணமடைந்தார்.

அவரது உடல் வவுனியா சுகாதாரப் பிரிவினரால் எடுத்து வரப்பட்டு வவுனியா, பூந்தோட்டத்தில் உள்ள நகரசபையின் மின்சார மயானத்தில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டது.