வவுனியாவில் வீதிகளில் தேவையின்றி நடமாடியவர்களை திருப்பி அனுப்பிய பொலிசார்!!

1762

வீதிகளில்..

பயணத்தடை சில கட்டுப்பாடுகளுடன் தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் வீதிகளில் அத்தியாவசிய தேவையின்றி பிராயணங்களை மேற்கொண்டவர்கள் வவுனியா பொலிசாரால் திருப்பி அனுப்பபட்டனர்.

அருகில் உள்ள வியாபார நிலையங்களுக்கு நடந்து சென்று அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட் கொள்வனவை மேற்கொள்வதற்கு இன்று (25.05) காலை 4 மணியில் இருந்து இரவு 11 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாகனங்கள் மற்றும் மோட்டர் சைக்கிளில் அத்தியாவசிய தேவையின்றி நகரை நோக்கி அதிகளவிலான மக்கள் வந்தமையால் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும்,

விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட வவுனியா பொலிசார், அத்தியாவசிய தேவையின்றி வீதிகளில் நடமாடியவர்களை எச்சரிக்கை விடுத்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பினர்.