மணமேடையில் மயங்கி விழுந்து மணமகள் திடீர் மரணம் : தங்கைக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!!

14918

உத்தரப்பிரதேசத்தில்..

உத்தரப்பிரதேசத்தில் மணமேடையில் மயக்கம் ஏற்பட்டு மணமகள் உயிரிழக்க, அவரது தங்கைக்கு மணமகன் தாலிகட்டிய சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் எடவாஹ் மாவட்டத்தில், எடவாஹ் மாவட்டம் சமஸ்பூர் பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மணமேடைக்கு மணமக்கள் இருவரும் வந்து மாலைகளை மாற்றி,

திருமணச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென மணமகள் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவர் வரவழைக்கப்பட்டு சோதனை செய்த போது, மணமகள் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், ஒருகட்டத்தில் மனதை தேற்றிக் கொண்டு மணமகளின் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். இதனைதொடர்ந்து மணமகளின் உடல் ஒரு அறையில் வைத்துவிட்டு, மற்றொரு அறையில் திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.

ஒரு அறையில் மகள் பிணமாகவும், மற்றொரு அறையில் மகள் மணமகளாகவும் இருப்பதை கண்டு பெற்றோர் கதறி துடித்த காட்சியால் உறவினர்கள் கலக்கமடைந்தனர்.