வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணம்!!

3022

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வயதான நபர் ஒருவர் கொரோனா தொற்றால் இன்று(29.05.2021) மரணமடைந்துள்ளார்.

மகாறம்பைக்குளம் ஶ்ரீராமபுரத்தை சேர்ந்த குறித்த நபர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பாதித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் மரணமடைந்துள்ளார்.