திருநாவற்குளம் பகுதியில்…
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் கொரோனா தொற்று காரணமாக பெண் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தார். இதனையடுத்து அவருடன் தொடர்புகளை பேணிய பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததுடன், இன்றையதினம் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை இன்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
இதேவேளை நாடளாவிய ரீதியாக பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருநாவற்குளம் பகுதியில் அநாவசியமான முறையில் பொதுமக்கள் வெளியில் திரிவதாக சுகாதார தரப்பிற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.
இதனையடுத்து இன்று மாலை குறித்த பகுதிக்குச் சென்ற வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி யூட்பீரிஸ் தலைமையிலான குழுவினர் நிலமை தொடர்பாக ஆராய்ந்ததுடன், கிராமத்திற்குள் உட்பிரவேசிக்கும் முக்கியவாயில்களில் பொலிசாரையும், இராணுவத்தினரையும் கடமையில் ஈடுபடுத்தியுள்ளனர்.
அத்தியவசிய தேவையை தவிர்ந்த ஏனையவர்கள் கிராமத்திற்குள் செல்வதற்கும், கிராமத்தில் இருந்து வெளிச்செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.