யாழில் 149 பேர் உட்பட வடக்கில் நேற்று 247 பேருக்கு கொரோனா தொற்று!!

1794

கொரோனா..

யாழ்ப்பாணத்தில் 149 பேர் உட்பட வடக்கில் நேற்று 247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 149 பேர், மன்னார் மாவட்டத்தில் 46 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் 27 பேர், வவுனியா மாவட்டத்தில் 16 போ், முல்லைத்தீவு மாவட்டத்தில் 09 பேர்.

இவ்வாறு வடக்கு மாகாணத்தில் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிந்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். ஆய்வுகூடங்களில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வட மாகாணத்தில் 135 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 96 பேர், மன்னார் மாவட்டத்தில் 14 பேர், வவுனியா மாவட்டத்தில் 11 போ், கிளிநொச்சி மாவட்டத்தில் 08 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 பேர்

இவ்வாறு, யாழ். ஆய்வுகூட பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில் 135 பேர் வட மாகாணத்தில் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.