வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் மரணம்!!

3037

கொரோனா…

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இன்று மரணமடைந்துள்ளார்.

குறித்த பெண் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் மரணமடைந்துள்ளார். அனுராதபுரம் பூனாவை பகுதியை சேர்ந்த 52 வயதான பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.